வில்லாபுரத்தில் பெண்ணிடம் 3 1/2 பவுன் நகை பறிப்பு

அவனியாபுரம்,
டிச. 31-
மதுரை வில்லாபுரம் அவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன், நகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவி அனிதா (வயது30). நேற்று இரவு, இவர் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது, பின் தொடர்ந்து வந்த “மர்ம” மனிதன் ஒருவன், அனிதா மீது பாய்ந்து, அவரது கழுத்தில் கிடந்த 3 1/2 பவுன் நகையை பறித்துள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா, திருடன்... திருடன்... என கத்தினார். ஆனால் அந்த வாலிபர், அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற இருவரோடு சேர்ந்து மின்னல் வேகத்தில் தப்பி விட்டான். இதுகுறித்து அனிதா போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ ராஜ், ஏட்டுகள் ஜோசப், தனபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வில்லாபுரம் அவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன், நகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவி அனிதா (வயது30). நேற்று இரவு, இவர் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது, பின் தொடர்ந்து வந்த “மர்ம” மனிதன் ஒருவன், அனிதா மீது பாய்ந்து, அவரது கழுத்தில் கிடந்த 3 1/2 பவுன் நகையை பறித்துள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா, திருடன்... திருடன்... என கத்தினார். ஆனால் அந்த வாலிபர், அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற இருவரோடு சேர்ந்து மின்னல் வேகத்தில் தப்பி விட்டான். இதுகுறித்து அனிதா போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ ராஜ், ஏட்டுகள் ஜோசப், தனபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.