என் விஷயத்தில் அம்மா தலையிடுவதில்லை- கடல் துளசி
மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் துளசி. இவர் மாஜி நடிகை ராதாவின் மகள் என்பதால், அவரது தலையீடு நிறைய இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் வெளியான செய்திகளை அடுத்து, துளசியை புக் பண்ண இயக்குனர்கள் தயங்கி வருகின்றனர். ஆனால் இந்த தகவல் ராதாவின் காதுக்கு சென்றபோது, நான் எனது மகள்கள் கார்த்திகா, துளசி இருவர் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்குகூட சென்றதில்லை. அந்த அளவுக்கு அவர்களை இயக்குனர்களின் முழுபொறுப்பில் விட்டு வருகிறேன் என்று கற்பூரம் அடித்து சத்யம் செய்து வருகிறார்.
இதை உறுதிப்படுத்த இப்போது கடல் படத்தில் நடித்துள்ள துளசியும் தன்னை சந்திக்கும் சினிமா நபர்களிடம் இதை தெளிவுபடுத்தி வருகிறார். முக்கியமாக, எனக்கான கதை கேட்கும்போது மட்டும் அம்மா உடனிருப்பார். ஆனால் கதை எல்லோருக்கும் பிடித்து விட்டது என்கிறபட்சத்தில் கதையில் அப்படி மாற்றம் செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்ற எந்தவித கமெண்டும் அவர் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்துக்கே வருவதில்லை. அதனால் என் விசயத்தில் அம்மா தலையிடுகிறார் என்று வெளியான தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வருகிறார் துளசி.
இதை உறுதிப்படுத்த இப்போது கடல் படத்தில் நடித்துள்ள துளசியும் தன்னை சந்திக்கும் சினிமா நபர்களிடம் இதை தெளிவுபடுத்தி வருகிறார். முக்கியமாக, எனக்கான கதை கேட்கும்போது மட்டும் அம்மா உடனிருப்பார். ஆனால் கதை எல்லோருக்கும் பிடித்து விட்டது என்கிறபட்சத்தில் கதையில் அப்படி மாற்றம் செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்ற எந்தவித கமெண்டும் அவர் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்துக்கே வருவதில்லை. அதனால் என் விசயத்தில் அம்மா தலையிடுகிறார் என்று வெளியான தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வருகிறார் துளசி.
நியூயார்க்: பிரசவத்தின் போது, டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளிவரும்படியான படம் தற்போது பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், கிளாண்டெல் பகுதியைச் சேர்ந்தவர் ரான்டி அட்கின்ஸ். இவரது மனைவி அலிசியா அட்கின்ஸ். கர்ப்பமாக இருந்த அட்கின்ஸ் கடந்த அக்டோபர் மாதம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு நிவியா என பெயரிடப்பட்டுள்ளது. மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்த ரான்டி, பிரசவத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை, டாக்டரின் கை விரலை அழகாக பிடித்துக்கொண்டே வெளி வந்தது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த டாக்டர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார். தற்போது இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். மேலும், படத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்தும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தண்ணீரின்றி நெல், பருத்தி, மக்காசோளம் பேரையூர் தாலுகா விவசாயிகள் கண்ணீர்