Wednesday, January 2, 2013


என் விஷயத்தில் அம்மா தலையிடுவதில்லை- கடல் துளசி

மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் துளசி. இவர் மாஜி நடிகை ராதாவின் மகள் என்பதால், அவரது தலையீடு நிறைய இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் வெளியான செய்திகளை அடுத்து, துளசியை புக் பண்ண இயக்குனர்கள் தயங்கி வருகின்றனர். ஆனால் இந்த தகவல் ராதாவின் காதுக்கு சென்றபோது, நான் எனது மகள்கள் கார்த்திகா, துளசி இருவர் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்குகூட சென்றதில்லை. அந்த அளவுக்கு அவர்களை இயக்குனர்களின் முழுபொறுப்பில் விட்டு வருகிறேன் என்று கற்பூரம் அடித்து சத்யம் செய்து வருகிறார்.

இதை உறுதிப்படுத்த இப்போது கடல் படத்தில் நடித்துள்ள துளசியும் தன்னை சந்திக்கும் சினிமா நபர்களிடம் இதை தெளிவுபடுத்தி வருகிறார். முக்கியமாக, எனக்கான கதை கேட்கும்போது மட்டும் அம்மா உடனிருப்பார். ஆனால் கதை எல்லோருக்கும் பிடித்து விட்டது என்கிறபட்சத்தில் கதையில் அப்படி மாற்றம் செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்ற எந்தவித கமெண்டும் அவர் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்துக்கே வருவதில்லை. அதனால் என் விசயத்தில் அம்மா தலையிடுகிறார் என்று வெளியான தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வருகிறார் துளசி.

டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த சிசு
நியூயார்க்: பிரசவத்தின் போது, டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளிவரும்படியான படம் தற்போது பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், கிளாண்டெல் பகுதியைச் சேர்ந்தவர் ரான்டி அட்கின்ஸ். இவரது மனைவி அலிசியா அட்கின்ஸ். கர்ப்பமாக இருந்த அட்கின்ஸ் கடந்த அக்டோபர் மாதம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு நிவியா என பெயரிடப்பட்டுள்ளது. மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்த ரான்டி, பிரசவத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை, டாக்டரின் கை விரலை அழகாக பிடித்துக்கொண்டே வெளி வந்தது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த டாக்டர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார். தற்போது இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். மேலும், படத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்தும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


மாணவருக்கு கத்திக்குத்து காதலியின் தந்தை கைது
மதுரை : மதுரையில் காதல் பிரச்னையில், கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார்.
மதுரை நாகமலை பூமிநாதன் மகன் வெற்றிவேல், 20. இவர், பி.காம்., இறுதியாண்டு மாணவர். பல்கலை ஊழியர் மணியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)மகள் உமா, 20. இவர், வேறு ஒரு கல்லூரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். இவரும், வெற்றிவேலும் ஏழாண்டாக காதலித்து வந்தனர்.
இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் சென்ற வெற்றிவேலை வழிமறித்த மணியன் கத்தியால் குத்தினார். அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணியனை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.


மனைவி கொலை கணவர் சரண்
சோழவந்தான் : சோழவந்தான் ஆர்.சி. பள்ளி தெற்குதெருவைச் சேர்ந்தவர் கோபால்,49. இவரது மனைவி சாரதா, 42, மகள்கள் தாரணி,8, மோகனா,4. மனைவி நடத்தையை கோபால் சந்தேகித்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை, சாரதா தலையில் போட்டு கொலை செய்தார். நேற்று காலை போலீசில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், எஸ்.ஐ., ஜோசப் ரவிச்சந்திரன் விசாரிக்கின்றனர்.


திறந்தவெளியில் சத்துணவு சமையல்
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் திறந்தவெளியில் சத்துணவு தயாரிப்பதால், மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் 312 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு தனியாக அமைக்கப்பட்ட சத்துணவுக்கூடத்தில் அவர்களுக்கான உணவு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேற்கூரை மற்றும் கதவுகள் பழுதடைந்தது. சத்துணவுக்கூடத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் திறந்தவெளியில் சுகாதாரமற்ற நிலையில் சமையல் தயாரிப்பதால், மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பள்ளி தரப்பில் கூறியதாவது: திறந்தவெளியில், மழைக் காலங்களில் சமைப்பதுதான் சிரமமாக உள்ளது. சிலநாட்கள் வகுப்பறை வராண்டாவில் சமைக்குமாறு தலைமையாசிரியை சொன்னார். பின், புகை படிவதாகக்கூறி, அனுமதி மறுத்ததால் மீண்டும் திறந்தவெளியிலேயே சமைக்கிறோம். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை பழுதடைந்த கூடத்தில் வைப்பதால் பாதுகாப்பில்லை. மழைக்கு நனைந்து வீணாவதாலும் அரிசி மூட்டைகளை மட்டும் வகுப்பறையில் வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளனர். இடியும் நிலையில் உள்ள மேற்கூரை, கதவு ஆகியவற்றை பழுதுநீக்கித் தரும்படி அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, என்றனர்.


தண்ணீரின்றி நெல், பருத்தி, மக்காசோளம் பேரையூர் தாலுகா விவசாயிகள் கண்ணீர்
பேரையூர்:பேரையூர் தாலுகாவில், 
ஆயிரக்கணக்கான ஏக்கர் 
பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், பருத்தி, மக்காசோளம் பயிர்கள், தண்ணீரின்றி கருகியதால் 
விவசாயிகள் கண்ணீரில் 
மூழ்கியுள்ளனர்.
இத்தாலுகாவில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல், 4 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், 4 ஆயிரம் ஏக்கரில் பருத்தி, சோளம், கம்பு போன்ற தானிய வகைகள் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. மழை இல்லாததால் இத்தாலுகாவில், கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், 60 சதவீதம் நெற்பயிர்கள் இதுவரை முற்றிலும் கருகிவிட்டன. "40 சதவீதம் நெற்பயிர்களிலும் மகசூல் இருக்காது,' என்கின்றனர் விவசாயிகள். 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி முற்றிலும் கருகிவிட்டன. இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 
திருமால், பெரியபூலாம்பட்டி: 
4 ஏக்கரில் நெல் நடவு செய்தேன். உழவு, நடவு, அடி உரமிட ரூ.70 ஆயிரம் செலவிட்டேன். ரூ.50 ஆயிரத்துக்கு நகைகளை அடகு வைத்தேன். 90 நாட்கள் பயிர்களுக்கு, ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர்கூட கிணற்றில் இல்லாததால் பயிர்கள், அனைத்தும் கருகிப்போச்சு. அடகு வச்ச நகையை எப்படி திருப்புவது என்று நினைத்தாலே கண்ணுமுழி பிதுங்குது. அரசு நிவாரணம் அளிக்கவேண்டும்.
வேலு: முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு வறட்சியை, இத்தாலுகாவில் நான் பார்த்ததில்லை. காய்ந்த நெல்லினுடைய வைக்கோல் கூட விற்பனையாகவில்லை. ஆடு, மாடுகளுக்கு தீனியாகின்றன. ஏராளமான விவசாயிகள் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
பாண்டியம்மாள்: மூன்று ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டேன். ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவானது. ஆனால், ஒரு மக்காசோள கதிரில் கூட உருப்படியான விளைச்சல் இல்லை. விளையாத கதிர்களை அழிப்பதற்கு செலவிட கூட எங்களுக்கு சக்தியில்லை. அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.


புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள், உடன் தங்க போதுமான இடமின்றி, மருத்துவமனை வெளியில் உள்ள கழிவறைகளில் தங்கள் இரவுப்பொழுதை கழித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகர் டில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனை. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவிலான நோயாளிகள் காரணமாக மருத்துவமனை தற்போது திணறி வருகிறது. இந்நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டில்லியில் கடும் பனி நிலவுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி, புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் உ.பி., மாநிலம் புலந்தர்ஷார் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு இதுவரை மருத்துவமனையில் படுக்கை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு கண்களையும் இழந்த அந்த சிறுவன் தனது தந்தையுடன் தினமும் இரவு அருகிலுள்ள கழிவறை ஒன்றில் தங்கி வருகிறான். இவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலானோர் கழிவறையிலேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தங்குவது மட்டுமின்றி, சமைப்பதும் கூட அங்கு தான். தற்போது கடும் குளிர் காரணமாக வீடிழந்தோரும் கழிவறைகளை நோக்கி வருவதால், அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டில்லி அரசு வீடில்லாதவர்களுக்காக சுமார் 150 இல்லங்களை கட்டி வைத்துள்ளது. ஆனால் அவற்றை தவிர்த்து 3 லட்சம் மக்கள் தற்போது வீதிகளில், உறைய வைக்கும் பனியில் தங்கி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த பதில், பனியை விட உறைய வைக்கிறது அவர்கள் தரும் இல்லங்கள். ஆம். அந்த இல்லங்களில் தங்குவதை விட கழிவறைகளில் தங்கி விடலாம் என்றே இங்கு வந்துள்ளதாகவும், கழிவறைகளை விட அந்த இல்லங்கள் அவ்வளவு மோசமாகவும், சுகாதாரக்கேடாகவும் இருப்பதாக கூறுகின்றனர் அங்கு சென்று திரும்பியவர்கள்.
புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள், உடன் தங்க போதுமான இடமின்றி, மருத்துவமனை வெளியில் உள்ள கழிவறைகளில் தங்கள் இரவுப்பொழுதை கழித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகர் டில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனை. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவிலான நோயாளிகள் காரணமாக மருத்துவமனை தற்போது திணறி வருகிறது. இந்நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டில்லியில் கடும் பனி நிலவுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி, புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் உ.பி., மாநிலம் புலந்தர்ஷார் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு இதுவரை மருத்துவமனையில் படுக்கை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு கண்களையும் இழந்த அந்த சிறுவன் தனது தந்தையுடன் தினமும் இரவு அருகிலுள்ள கழிவறை ஒன்றில் தங்கி வருகிறான். இவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலானோர் கழிவறையிலேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தங்குவது மட்டுமின்றி, சமைப்பதும் கூட அங்கு தான். தற்போது கடும் குளிர் காரணமாக வீடிழந்தோரும் கழிவறைகளை நோக்கி வருவதால், அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டில்லி அரசு வீடில்லாதவர்களுக்காக சுமார் 150 இல்லங்களை கட்டி வைத்துள்ளது. ஆனால் அவற்றை தவிர்த்து 3 லட்சம் மக்கள் தற்போது வீதிகளில், உறைய வைக்கும் பனியில் தங்கி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த பதில், பனியை விட உறைய வைக்கிறது அவர்கள் தரும் இல்லங்கள். ஆம். அந்த இல்லங்களில் தங்குவதை விட கழிவறைகளில் தங்கி விடலாம் என்றே இங்கு வந்துள்ளதாகவும், கழிவறைகளை விட அந்த இல்லங்கள் அவ்வளவு மோசமாகவும், சுகாதாரக்கேடாகவும் இருப்பதாக கூறுகின்றனர் அங்கு சென்று திரும்பியவர்கள்.