Saturday, January 19, 2013


கனடாவில் மகர விளக்கு பூஜை

ஜனவரி 19,2013  IST
பர்ன்பை : கனடாவின் பர்ன்பை பகுதியில் உள்ள அருள்மிகு துர்க்கா தேவி ஆலயத்தில் ஜனவரி 13ம் தேதி சுவாமி ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. அன்று மா‌லை ஐயப்பனுக்கு நெய், தயி்ர்,விபூதி,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், பக்தர்களின் பஜனைகளும் நடைபெற்றது. மாலை அணிந்த பக்தர்கள் நெய் தேங்காய் தயாரித்து இருமுடி கட்டிக் கொண்டனர். சுவாமி ஐயப்பனைத் தொடர்ந்து 18 படிகளிலும் விளக்கேற்றி படிபூஜை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்து மகரஜோதி காட்சி தரும் வேளையில் மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தர்களின் சரண கோஷம். காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், "டாஸ் வென்ற இந்திய அணி "பீல்டிங் தேர்வு செய்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. 
மூன்றாவது போட்டி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி "பீல்டிங் "பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்சிற்குப் பதில் பிரஸ்னன் இடம் பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு குக், பெல் இணைந்து நிதான துவக்கம் தந்தனர். பின் குக், பீட்டர்சன் தலா 17 ரன்களில் அவுட்டாகினர். பெல் 25 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.