கருணாநிதியும் கரித்துண்டும்!வி.ராஜகோபால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும்;இல்லையேல், எங்கள் செய்திகளை, சுவர்களில், கரித்துண்டு வைத்து எழுதுவோம் என்று, அன்பழகன் பிறந்த நாள் கூட்டத்தில் பேசி இருக்கிறார், கருணாநிதி,செய்தி வெளியிடவில்லை என்பதற்காக, நாங்கள் கதற மாட்டோம்; வெளியிடா விட்டால் கவலை இல்லை. பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து, எங்களை அழிக்க நினைத்தால், அவர்களுக்கு தோல்வி தான் என்றும் அறிவித்திருக்கிறார்.
வாசகர்கள் பார்வையின்படி, பத்திரிகைகளில், குறிப்பாக, தினமலர் நாளிதழில், தி.மு.க., பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன. பிறகு, கருணாநிதி எதைப் பற்றி குறிப்பிடுகிறார்? கையில் கரித்துண்டை ஏன் எடுக்கிறார்?
சில பத்திரிகைகள், அவரை இருட்டடிப்பு செய்வதாகவே வைத்துக் கொள்வோம். அவருடைய முரசொலியில், தி.மு.க., செய்திகள் வருவதில்லையா அல்லது தன் கட்சிக்காரர்களே, அதைப் படிப்பது இல்லை என, எண்ணுகிறாரா? பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து, எங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு, தோல்வியே ஏற்படும் என, யாரை மனதில் வைத்து சொன்னார்? பூணூல் அணிந்த ராஜாஜியின், சுதந்திரா கட்சியுடன், 1967ல் தேர்தல் கூட்டணி வைத்து, வென்று, தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததை அவர் மறந்து விட்டாரா? இவர் புரிந்த ஊழல்களின் பட்டியலை, கவர்னரிடம், மனுவாகக் கொடுத்து, அவரது ஆட்சி வீழ்ச்சியடையக் காரணமாக இருந்த, காம்ரேட் கல்யாணசுந்தரமும், எம்.ஜி.ஆரும் பூணூல் போட்டவர்களா?
ஜாதி அடிப்படையில், பூணூல் போட்டவர்கள் எல்லாம் எதிரிகள் என்று அவர் சொன்னால், அது முற்றிலும் தவறு. பிராமணர்கள் மட்டும் அல்ல; வைசியர், சத்திரியர் போன்றவர்களுக்கும் பூணூல் அணியும் பழக்கம் உண்டு.அன்னியப் படையெடுப்பாளரிடம் தோற்று, கொடுமைகளுக்கு ஆளான சத்திரியர், போர்த் தொழிலையும், தங்கள் அடையாளமான பூணூலையும் துறந்து, விவசாயம் போன்ற, வேறு தொழில்களுக்கு போய் விட்டனர் என்பது வரலாறு. வன்னியர்குல சத்திரியர், சத்திரிய நாடார் என்று, இப்போதும், சில சமுதாயத்தவரின் பெயர் இருப்பதை காணலாம். கருணீகர்கள், விஸ்வகர்மாக்களான பொற்கொல்லர், தச்சு மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களும் பூணூல் போடுபவர்களே.
ஆகவே, கருணாநிதி, ஒட்டு மொத்தமாக பூணூல் போடுபவர்கள் எல்லாம், தன்னை சேர்ந்தவர்களுக்கு பகையாளிகள் என்று கருதிக் கொண்டிருப்பது, பெரும்பிழை.
தி.மு.க.,வினரின் சரிவுக்கு காரணம், அவர்கள் புரிந்த, வரலாறு காணாத ஊழல்களே என்பதை மறைத்து, மக்களையும், ஏன், தன் கட்சிக்காரர்களையும் திசை திருப்ப நினைக்கும் கருணாநிதியின் தந்திரம், கண்டிப்பாக தோல்வியை தழுவும்.
ஆகவே, கருணாநிதி, ஒட்டு மொத்தமாக பூணூல் போடுபவர்கள் எல்லாம், தன்னை சேர்ந்தவர்களுக்கு பகையாளிகள் என்று கருதிக் கொண்டிருப்பது, பெரும்பிழை.
தி.மு.க.,வினரின் சரிவுக்கு காரணம், அவர்கள் புரிந்த, வரலாறு காணாத ஊழல்களே என்பதை மறைத்து, மக்களையும், ஏன், தன் கட்சிக்காரர்களையும் திசை திருப்ப நினைக்கும் கருணாநிதியின் தந்திரம், கண்டிப்பாக தோல்வியை தழுவும்.
அன்றும்இப்படித் தான்வந்தனர்!கார்த்திகா நந்தகுமார், அருவங்காடு, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்த பிறகும், மீண்டும், அடிமையாக துடிக்கிறது, நம் இந்தியா.அன்று, வியாபாரம் செய்ய வந்த ஐரோப்பியர்கள், சூழ்ச்சி செய்து, நம்மை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்தனர். சிதறுண்டு கிடந்த சிற்றரசுகளுக்கு, கடன் கொடுத்து, அதை திருப்பிச் செலுத்த முடியாத, அரசுகளிடமிருந்து, வரிவசூல் செய்யும் உரிமையை பறித்து, காலப்போக்கில், நம்மை அடிமைப்படுத்தினர்.
இன்றும், அதே சூழ்ச்சி தான். ஆனால், நேரடி அன்னிய முதலீடு என்று, வேறு பெயர் தாங்கி வந்திருக்கிறது.
இன்றும், அதே சூழ்ச்சி தான். ஆனால், நேரடி அன்னிய முதலீடு என்று, வேறு பெயர் தாங்கி வந்திருக்கிறது.
இது தொடர்பாக, இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை, நிறைவேற்றத் தவறினால், உலக வங்கியில், இந்தியா, கடன் பெறும் தகுதியை இழக்க நேரிடுமாம்.
அதாவது, இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த, கடன் பெற வேண்டுமானால், வியாபாரம் செய்யும் உரிமையை, அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நம்புங்கள் இந்தியரே... இப்போது, அவர்கள் வியாபாரம் செய்ய மட்டும் தான் அனுமதி கேட்கின்றனர். இதில், நாடுபிடிக்கும் திட்டமோ, நாட்டின் செல்வ வளத்தை சுரண்டும் எண்ணமோ, அவர்களுக்கு சிறிதும் கிடையாது.
அதாவது, இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த, கடன் பெற வேண்டுமானால், வியாபாரம் செய்யும் உரிமையை, அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நம்புங்கள் இந்தியரே... இப்போது, அவர்கள் வியாபாரம் செய்ய மட்டும் தான் அனுமதி கேட்கின்றனர். இதில், நாடுபிடிக்கும் திட்டமோ, நாட்டின் செல்வ வளத்தை சுரண்டும் எண்ணமோ, அவர்களுக்கு சிறிதும் கிடையாது.
இதற்கு, காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும், அரசியல் நிபுணர்களும், பொருளாதார மேதைகளும், அவர்களை பின்னிருந்து இயக்குகிற, இந்திய திருமகள் சோனியாவும் சாட்சி.
இந்தியாவை, வெளிநாடுகளுக்கு அடகு வைக்க, இத்தனை பிரயத்தனப்படுகிற காங்கிரஸ் அரசு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்பு பணத்தை மீட்டெடுக்க மெத்தனம் காட்டுவது ஏன்? வரி ஏய்ப்பு செய்து வரும் மிகப்பெரிய நிறுவனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?முட்டாள்கள் வாழும் நாட்டில், கோமாளிகளின் ஆட்சி.என்ன செய்வது?
இந்தியாவை, வெளிநாடுகளுக்கு அடகு வைக்க, இத்தனை பிரயத்தனப்படுகிற காங்கிரஸ் அரசு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்பு பணத்தை மீட்டெடுக்க மெத்தனம் காட்டுவது ஏன்? வரி ஏய்ப்பு செய்து வரும் மிகப்பெரிய நிறுவனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?முட்டாள்கள் வாழும் நாட்டில், கோமாளிகளின் ஆட்சி.என்ன செய்வது?
ராயல்சல்யூட்அடிப்போம்!செ.மாரியப்பன், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: கடந்த மாதம், மானாமதுரை என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் பிரபு, பாரதி ஆகியோரின் பெற்றோர், தங்கள் மகன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.கோஷ்டி தகராறை தடுக்கச் சென்று கண் டித்த, தன் கடமையே கண்ணாக செயல்பட்ட இளம் ஆய்வாளர் ஆல்வின் சுதன், ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டாரே, இதற்கு எந்த விசாரணை நடத்துவதாம்?தனக்கு வேலை கிடைத்ததும், அம்மா, அப்பா, தங்கை, தம்பி, நீங்கள்இனி, கூலி வேலைக்கு செல்ல வேண்டாம்; அனைவருக்கும், நான் சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாரே...
அவரது குடும்பத்தின்இன்றைய கதி?இதற்கு எந்த விசாரணை நடத்துவதாம்?நான்காயிரம் பேர் நிம்மதியை,நான்கு பேர் கெடுக்கின்றனர் என்றால், அந்த கிருமியை அழிப்பதில் தவறில்லை என்கிறார், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி., வெள்ளத்துரை!அந்த ரவுடிகளை, அவ்வளவு நாட்கள் விட்டு வைத்ததே தவறு. அந்த விஷ கிருமிகளை, அங்கேயே சுட்டுத் தள்ளி இருக்க வேண்டும், காவல்துறை. கையில் துப்பாக்கி இல்லாத காரணத்தால், அந்த ரவுடிகள், அப்போது உயிர் தப்பினர்.
இதற்கு நீதி விசாரணை, சி.பி.ஐ., விசாரணை என்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.அழிக்க வேண்டிய கிருமிகளை, என்கவுன்டரில் அழித்து விட்டனர் காவல் துறையினர்.இனி, மக்கள் நிம்மதியாக இருப்பர். எனவே, தமிழக மக்கள் சார்பாக, மானாமதுரை காவல்துறைக்கு, ஒரு ராயல் சல்யூட் போட்டு, வாழ்த்து சொல்லுவோம்.