Saturday, January 26, 2013

5 பவுன் நகைக்காக பெண் கொலை
அவனியாபுரம்: அவனியாபுரத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, 5 பவுன் நகையை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதி பசும்பொன் நகரை சேர்ந்தவர் சமயா, 55. காய்கறி வியாபாரம் செய்தார். கணவரை இழந்த இவருக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்றுமுன்தினம், மகன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுவிட்டு, இரவு 10 மணிக்கு சமயா வீடு திரும்பினார். நேற்று காலை வீட்டை ஒட்டியுள்ள முள்செடிகளுக்கு அருகே பிணமாக கிடந்தார். பாலகிருஷ்ணன் எஸ்.பி., டி.எஸ்.பி., புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் விசாரித்தனர்.விசாரணையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தில் இருந்த 5 பவுன் நகை திருடு போயிருந்ததும் தெரிந்தது.வீட்டினுள் இருந்த சமயாவை, கொலை செய்து வெளியில் வீசினார்களா? வீட்டிற்குள் நுழையும் போது, மறைந்திருந்த கொலையாளி, அவரை கொன்று நகையை திருடினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment