Wednesday, January 30, 2013


கொட்டாம்பட்டியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமையுமா தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, தென்னை விவசாயிகளின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 8 ஆயிரத்து 500 ஏக்கரில் தென்னை பயிரிடப்படுகிறது. பெரும்பாலனோர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் விளைவிக்கும் தேங்காய்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் உரிய விலை கொடுப்பதில்லை.இப்பகுதியில், அரசு சார்பில் தேங்காய் கொள்முதல் அமைக்க வேண்டும் என விவசாயிகளின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆறுமுகம்: 10 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். அவசரத் தேவைகளுக்கு வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கி விடுவதால், அவர்களது குடவுனிற்கே தேங்காய்களை கொண்டுவரச் சொல்கின்றனர். ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ரூ.10 கூலியாகிறது. வண்டி வாடகை, ஏற்று, இறக்குக் கூலிகள் போக, பெரிதாக லாபம் கிடைப்பதில்லை. அதிலும், வியாபாரிகள் சொல்லும் விலைக்குதான் விற்க வேண்டியுள்ளது.முத்து: ஆயிரம் தேங்காய்கள் வாங்கும் வியாபாரிகளுக்கு 150 காய்களை இலவசமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. எங்களிடம் ஒரு காய் ரூ.3க்கு வாங்கி, சந்தையில் ரூ.10க்கு விற்கின்றனர். சிறிய காய்களை கழிவுக் காய்கள் என ஒதுக்கும் வியாபாரிகள், அவற்றை 50 காசு என விலை நிர்ணயித்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் எங்களது உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில்லை. இப்பகுதியில் அரசு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து, உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

Photo Gallery

விஸ்வரூபத்திற்கு தடை: சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு
புதுடில்லி: கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனிஷ் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது. இத்தகைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வர இதுவே சரியான தருணம். அவ்வாறு திருத்தம் செய்யப்படும் போது, ஒரு முறை சென்சார் போர்டு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஒரு திரைப்படத்தை மாநில அரசு கேள்வி கேட்க முடியாது. இது மிகவும் அவசியமான திருத்தம் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி சென்சார் போர்டுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான். சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் ஒரு கமிட்டி ஒன்று உருவாக்கும் எண்ணம் உள்ளது. மேலும், ஒரு மேல்முறையீட்டு அமைப்பை உருவாக்கி அதில் சர்ச்சைக்குரிய படங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மனிஷ் திவாரியின் இந்த கருத்துக்கு, சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு அமைப்பு உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், மிக நீண்ட நாட்களுக்குப்பின் தான் இது போன்ற சந்தோஷமான செய்தியை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Saturday, January 26, 2013

5 பவுன் நகைக்காக பெண் கொலை
அவனியாபுரம்: அவனியாபுரத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, 5 பவுன் நகையை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதி பசும்பொன் நகரை சேர்ந்தவர் சமயா, 55. காய்கறி வியாபாரம் செய்தார். கணவரை இழந்த இவருக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்றுமுன்தினம், மகன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுவிட்டு, இரவு 10 மணிக்கு சமயா வீடு திரும்பினார். நேற்று காலை வீட்டை ஒட்டியுள்ள முள்செடிகளுக்கு அருகே பிணமாக கிடந்தார். பாலகிருஷ்ணன் எஸ்.பி., டி.எஸ்.பி., புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் விசாரித்தனர்.விசாரணையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தில் இருந்த 5 பவுன் நகை திருடு போயிருந்ததும் தெரிந்தது.வீட்டினுள் இருந்த சமயாவை, கொலை செய்து வெளியில் வீசினார்களா? வீட்டிற்குள் நுழையும் போது, மறைந்திருந்த கொலையாளி, அவரை கொன்று நகையை திருடினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Sunday, January 20, 2013


கருணாநிதியும் கரித்துண்டும்!வி.ராஜகோபால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும்;இல்லையேல், எங்கள் செய்திகளை, சுவர்களில், கரித்துண்டு வைத்து எழுதுவோம் என்று, அன்பழகன் பிறந்த நாள் கூட்டத்தில் பேசி இருக்கிறார், கருணாநிதி,செய்தி வெளியிடவில்லை என்பதற்காக, நாங்கள் கதற மாட்டோம்; வெளியிடா விட்டால் கவலை இல்லை. பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து, எங்களை அழிக்க நினைத்தால், அவர்களுக்கு தோல்வி தான் என்றும் அறிவித்திருக்கிறார்.
வாசகர்கள் பார்வையின்படி, பத்திரிகைகளில், குறிப்பாக, தினமலர் நாளிதழில், தி.மு.க., பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன. பிறகு, கருணாநிதி எதைப் பற்றி குறிப்பிடுகிறார்? கையில் கரித்துண்டை ஏன் எடுக்கிறார்?
சில பத்திரிகைகள், அவரை இருட்டடிப்பு செய்வதாகவே வைத்துக் கொள்வோம். அவருடைய முரசொலியில், தி.மு.க., செய்திகள் வருவதில்லையா அல்லது தன் கட்சிக்காரர்களே, அதைப் படிப்பது இல்லை என, எண்ணுகிறாரா? பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து, எங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு, தோல்வியே ஏற்படும் என, யாரை மனதில் வைத்து சொன்னார்? பூணூல் அணிந்த ராஜாஜியின், சுதந்திரா கட்சியுடன், 1967ல் தேர்தல் கூட்டணி வைத்து, வென்று, தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததை அவர் மறந்து விட்டாரா? இவர் புரிந்த ஊழல்களின் பட்டியலை, கவர்னரிடம், மனுவாகக் கொடுத்து, அவரது ஆட்சி வீழ்ச்சியடையக் காரணமாக இருந்த, காம்ரேட் கல்யாணசுந்தரமும், எம்.ஜி.ஆரும் பூணூல் போட்டவர்களா?
ஜாதி அடிப்படையில், பூணூல் போட்டவர்கள் எல்லாம் எதிரிகள் என்று அவர் சொன்னால், அது முற்றிலும் தவறு. பிராமணர்கள் மட்டும் அல்ல; வைசியர், சத்திரியர் போன்றவர்களுக்கும் பூணூல் அணியும் பழக்கம் உண்டு.அன்னியப் படையெடுப்பாளரிடம் தோற்று, கொடுமைகளுக்கு ஆளான சத்திரியர், போர்த் தொழிலையும், தங்கள் அடையாளமான பூணூலையும் துறந்து, விவசாயம் போன்ற, வேறு தொழில்களுக்கு போய் விட்டனர் என்பது வரலாறு. வன்னியர்குல சத்திரியர், சத்திரிய நாடார் என்று, இப்போதும், சில சமுதாயத்தவரின் பெயர் இருப்பதை காணலாம். கருணீகர்கள், விஸ்வகர்மாக்களான பொற்கொல்லர், தச்சு மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களும் பூணூல் போடுபவர்களே.
ஆகவே, கருணாநிதி, ஒட்டு மொத்தமாக பூணூல் போடுபவர்கள் எல்லாம், தன்னை சேர்ந்தவர்களுக்கு பகையாளிகள் என்று கருதிக் கொண்டிருப்பது, பெரும்பிழை.
தி.மு.க.,வினரின் சரிவுக்கு காரணம், அவர்கள் புரிந்த, வரலாறு காணாத ஊழல்களே என்பதை மறைத்து, மக்களையும், ஏன், தன் கட்சிக்காரர்களையும் திசை திருப்ப நினைக்கும் கருணாநிதியின் தந்திரம், கண்டிப்பாக தோல்வியை தழுவும்.
அன்றும்இப்படித் தான்வந்தனர்!கார்த்திகா நந்தகுமார், அருவங்காடு, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்த பிறகும், மீண்டும், அடிமையாக துடிக்கிறது, நம் இந்தியா.அன்று, வியாபாரம் செய்ய வந்த ஐரோப்பியர்கள், சூழ்ச்சி செய்து, நம்மை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்தனர். சிதறுண்டு கிடந்த சிற்றரசுகளுக்கு, கடன் கொடுத்து, அதை திருப்பிச் செலுத்த முடியாத, அரசுகளிடமிருந்து, வரிவசூல் செய்யும் உரிமையை பறித்து, காலப்போக்கில், நம்மை அடிமைப்படுத்தினர்.
இன்றும், அதே சூழ்ச்சி தான். ஆனால், நேரடி அன்னிய முதலீடு என்று, வேறு பெயர் தாங்கி வந்திருக்கிறது. 
இது தொடர்பாக, இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை, நிறைவேற்றத் தவறினால், உலக வங்கியில், இந்தியா, கடன் பெறும் தகுதியை இழக்க நேரிடுமாம்.
அதாவது, இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த, கடன் பெற வேண்டுமானால், வியாபாரம் செய்யும் உரிமையை, அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நம்புங்கள் இந்தியரே... இப்போது, அவர்கள் வியாபாரம் செய்ய மட்டும் தான் அனுமதி கேட்கின்றனர். இதில், நாடுபிடிக்கும் திட்டமோ, நாட்டின் செல்வ வளத்தை சுரண்டும் எண்ணமோ, அவர்களுக்கு சிறிதும் கிடையாது.
இதற்கு, காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும், அரசியல் நிபுணர்களும், பொருளாதார மேதைகளும், அவர்களை பின்னிருந்து இயக்குகிற, இந்திய திருமகள் சோனியாவும் சாட்சி.
இந்தியாவை, வெளிநாடுகளுக்கு அடகு வைக்க, இத்தனை பிரயத்தனப்படுகிற காங்கிரஸ் அரசு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்பு பணத்தை மீட்டெடுக்க மெத்தனம் காட்டுவது ஏன்? வரி ஏய்ப்பு செய்து வரும் மிகப்பெரிய நிறுவனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?முட்டாள்கள் வாழும் நாட்டில், கோமாளிகளின் ஆட்சி.என்ன செய்வது?
ராயல்சல்யூட்அடிப்போம்!செ.மாரியப்பன், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: கடந்த மாதம், மானாமதுரை என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் பிரபு, பாரதி ஆகியோரின் பெற்றோர், தங்கள் மகன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.கோஷ்டி தகராறை தடுக்கச் சென்று கண் டித்த, தன் கடமையே கண்ணாக செயல்பட்ட இளம் ஆய்வாளர் ஆல்வின் சுதன், ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டாரே, இதற்கு எந்த விசாரணை நடத்துவதாம்?தனக்கு வேலை கிடைத்ததும், அம்மா, அப்பா, தங்கை, தம்பி, நீங்கள்இனி, கூலி வேலைக்கு செல்ல வேண்டாம்; அனைவருக்கும், நான் சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாரே... 
அவரது குடும்பத்தின்இன்றைய கதி?இதற்கு எந்த விசாரணை நடத்துவதாம்?நான்காயிரம் பேர் நிம்மதியை,நான்கு பேர் கெடுக்கின்றனர் என்றால், அந்த கிருமியை அழிப்பதில் தவறில்லை என்கிறார், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி., வெள்ளத்துரை!அந்த ரவுடிகளை, அவ்வளவு நாட்கள் விட்டு வைத்ததே தவறு. அந்த விஷ கிருமிகளை, அங்கேயே சுட்டுத் தள்ளி இருக்க வேண்டும், காவல்துறை. கையில் துப்பாக்கி இல்லாத காரணத்தால், அந்த ரவுடிகள், அப்போது உயிர் தப்பினர். 
இதற்கு நீதி விசாரணை, சி.பி.ஐ., விசாரணை என்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.அழிக்க வேண்டிய கிருமிகளை, என்கவுன்டரில் அழித்து விட்டனர் காவல் துறையினர்.இனி, மக்கள் நிம்மதியாக இருப்பர். எனவே, தமிழக மக்கள் சார்பாக, மானாமதுரை காவல்துறைக்கு, ஒரு ராயல் சல்யூட் போட்டு, வாழ்த்து சொல்லுவோம்.

50வது நாளை கொண்டாடியது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

சினிமாவில் வெற்றி விழா கொண்டாடி ஷீல்டு கொடுப்பதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. காரணம் எந்தப் படமும் 100 நாள் வரை ஓடுவதில்லை. சில படங்களை வேண்டுமென்றே 100 நாள் ஓட்டுவார்கள். இதனால் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் வெளியூர்களில் தியேட்டரில் காணோம். என்றாலும் சென்னையில் திரையிட்ட தியேட்டர்கள் அனைத்திலும் 50 நாட்கள் ஓடிவிட்டது. இதையே ஒரு விழா எடுத்து கொண்டாடிவிட்டார்கள்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் அனைவருக்கும் ஷீல்டு கொடுத்தார். பார்த்திபன், சிவஸ்ரீ சீனிவாசன், யுடிவி தனஞ்செயன், கேயார், யூகி சேது, விமல், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோ விஜய்சேதுபதி என்னாச்சு... என்ற புகழ்பெற்ற வசனத்தை பேசினர். ஹீரோயின் காயத்திரி படத்தில் வந்தது போல் இல்லாமல் நல்ல மேக்அப்புடன் அழகாக வந்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் நடிகைகளுக்கு ஷீல்டு கொடுக்கும் படம் போட்டோகிராபர்களுக்கு கிடைத்தது.

சைக்கோ ஹீரோயின் படம்

ஹீரோக்கள்தான் சைக்கோவாக நடிக்க வேண்டுமா, ஏன் ஹீரோயின்கள் சைக்கோவாக இருக்க கூடாதா என்று இயக்குனர் இதயன் ரூம் போட்டு யோசித்து எழுதிய கதை சுடச்சுட என்ற படமாக வரப்போகிறது. சோபினா வாசுதேவ் என்ற புதுமுகம்தான் அந்த சைக்கோ ஹீரோயின். பள்ளியில் படிக்கும் அவர் தன் சைக்கோ குணங்களை மறைத்து வாழ்கிறார். அவர் தோழி ஸ்ரீஇராவுக்கு ஒரு அநியாயம் நேர்ந்து விடுகிறது. அந்த அநியாயத்தை செய்தவர்களை தேடிப்பிடித்து வெறியோடு பழிவாங்குவார் சோபினா. ஹீரோ நளன். அவரது வேலை ஹீரோயினை காதலித்து அவளது தோழியை சீரழிப்பதுதான். அதாவது நளன் ஆண்டி ஹீரோவாம். இதுதான் சுடச்சுட படத்தின் கதை. காலை 6 மணி தொடங்கி மாலை 6 வரை 12 மணி நேரத்தில் நடக்கும் கதை. சென்னையை சுற்றி சுற்றி படம் எடுத்து முடித்து விட்டார்கள். பிப்ரவரியில் ரிலீஸ் செய்கிறார்கள்.