Friday, December 21, 2012


பெரிய ஆஸ்பத்திரியில் ஆபரேஷனுக்கு ரத்தம் பெற்றுத்தர ரூ.4 ஆயிரம் கேட்ட பணியாளர் பெண் நோயாளி குமுறல்

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் வாரத்திற்கு குறைந்தது 10 பேருக்காவது இருதய ஆபரேஷன் செய்யப்படுகிறது. இந்த நிலையில் செல்லத்தாய் என்ற பெண் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் நேற்று அவருக்கு இருதய ஆபரேஷன் நடக்க இருந்தது.
இந்த நிலையில் செல்லத்தாயிடம் வந்த ஆஸ்பத்திரி பணியாளர் ஒருவர், ‘‘உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் 6 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இந்த ரத்தம் பெறுவதற்கு ரூ.4 ஆயிரம் செலவாகும். இந்த பணத்தை கொடுத்தால் தான் ரத்தம் பெற முடியும்’’ என்றார். அதற்கு செல்லத்தாய், ‘அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. நான் மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவள்‘ என்றார். ஆனால் அந்த பணியாளர், ‘பணம் கொடுத்தால் தான் ரத்தம் கிடைக்கும்‘ என்று கண்டிப்பாக கூறிவிட்டார். எனவே, செல்லத்தாய், அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டு வெளியேறி விட்டார்.
அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி ஏழை மக்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டதாகும். இதில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பணம் கேட்டு ஊழியர்கள் நோயாளிகளை தொந்தரவு செய்வதால், சிகிச்சைக்கு வருபவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பெரிய ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சைக்கான முறையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்தால் ஏழை–எளிய மக்கள் மிகுந்த பயன்பெறுவர்.

No comments:

Post a Comment