"முன்பனிச்சாரல்' பொருட்காட்சி மதுரையில் இன்றுமுதல் துவக்கம்
மதுரை:மதுரையில் நாடார் மகாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை சார்பில் தமுக்கம் மைதானத்தில், "முன்பனிச்சாரல்' என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்காட்சி மற்றும் கல்வி கண்காட்சி டிச.,21 முதல் ஜன.,2ம் தேதி வரை நடக்கிறது."முன்பனிச்சாரல்' நிர்வாகிகள் மகேந்திரவேல், சிவசுப்பிரமணியன், வஞ்சிக்கோ ஆகியோர் கூறியதாவது: மதுரையில் முதன்முறையாக, "ஆப்பிரிக்கன் அக்ரோப்டிக்' நடன நிகழ்ச்சி, தினமும் மாலை நடக்கும்.
"இஸ்ரோ' ராக்கெட் கண்காட்சி, காய்கறி
சிற்பங்கள், புத்தகங்கள், கருத்தரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு கூடங்கள், 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு
கட்டணம் ரூ.30. அடையாள அட்டையுடன் வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10
கட்டணம். 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவசம். இன்று (டிச.,21) கல்வி கண்காட்சி துவங்குகிறது. இதில், கருத்தரங்குகள், பேராசிரியர்கள், வல்லுனர்கள் பேசவுள்ளனர். நாளை (டிச.,22) வீட்டு உபயோக கண்காட்சி துவங்குகிறது.
வனத்துறை அமைச்சர் பச்சைமால்
திறந்து வைக்கிறார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் நாகேந்திர மூர்த்தி பங்கேற்கவுள்ளனர், என்றனர்.
No comments:
Post a Comment