Friday, January 18, 2013

உழவன் வீட்டில் விழும் இழவு, நாட்டின் தலைமீது விழும் அதிர்வு!

வறுமைக்குப் பயந்து இன்றைய டெல்டா விவசாயிகள் தங்களைத் தாங்களே அறுவடைசெய்து கொள்கிறார்களே?

இது மிக மோசமான சமிக்ஞை!

'நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது’ என்பது பழைய கவிதை.

'சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்; அதனால்

உழன்றும் உழவே தலை’ - என்பது அதற்கும் முந்தைய குறள். உலகம் உழவையே நம்பி இயங்குகிறது, அதனால் எவ்வளவு துன்பம் வரினும் உழவே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். ஆனால் உழவை கேவலமான தொழிலாகவும் உழவனை நாட்டின் சுமையாகவும் நினைக்கும் சமூகமாக மாறிவிட்டோம். ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டால் நூறு பேர் பட்டினி கிடக்கப் போகிறார்கள், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருளின் உற்பத்தி குறையப் போகிறது என்று அர்த்தம். மிக மோசமான நிலைமையை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. உழவன் வீட்டில் விழும் இழவு, நாட்டின் தலைமீது விழும் அதிர்வு!

No comments:

Post a Comment