மனைவிக்கு "கேன்சர்' எனக்கூறி 2வது திருமணம் செய்தவர் கைது
மதுரை:மனைவிக்கு "கேன்சர்' எனக்கூறி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த, மதுரை சொக்கலிங்கநகர் சுரேஷ்,32 கைது செய்யப்பட்டார்.சுரேஷ் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவருக்கு மனைவி ராதா,30. இரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடித்து விட்டு தகராறு செய்ததால், மனைவியிடம் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். கணவருக்கு 2வது திருமணம் நடந்ததாக, மதுரை தெற்கு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மனைவி ராதா புகார் செய்தார். ராதா கூறுகையில்,""என்னுடன் சண்டையிட்டு, வீட்டுக்கு வராமல் இருந்தார். அலங்காநல்லூர் சின்ன இலந்தைக்குளம் செல்வியுடன், 22, பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு "கேன்சர்' என்றும், சில மாதங்களில் இறந்து விடுவேன் எனவும் பொய் கூறி, நேற்று முன் தினம் அவரை திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகளுடன் வருமானமின்றி கஷ்டப்படுகிறேன்,'' என்றார்.உதவி கமிஷனர் ராஜாமணி உத்தரவின்படி, சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment