திறந்தவெளியில் சத்துணவு சமையல்
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் திறந்தவெளியில் சத்துணவு தயாரிப்பதால், மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் 312 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு தனியாக அமைக்கப்பட்ட சத்துணவுக்கூடத்தில் அவர்களுக்கான உணவு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேற்கூரை மற்றும் கதவுகள் பழுதடைந்தது. சத்துணவுக்கூடத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் திறந்தவெளியில் சுகாதாரமற்ற நிலையில் சமையல் தயாரிப்பதால், மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பள்ளி தரப்பில் கூறியதாவது: திறந்தவெளியில், மழைக் காலங்களில் சமைப்பதுதான் சிரமமாக உள்ளது. சிலநாட்கள் வகுப்பறை வராண்டாவில் சமைக்குமாறு தலைமையாசிரியை சொன்னார். பின், புகை படிவதாகக்கூறி, அனுமதி மறுத்ததால் மீண்டும் திறந்தவெளியிலேயே சமைக்கிறோம். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை பழுதடைந்த கூடத்தில் வைப்பதால் பாதுகாப்பில்லை. மழைக்கு நனைந்து வீணாவதாலும் அரிசி மூட்டைகளை மட்டும் வகுப்பறையில் வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளனர். இடியும் நிலையில் உள்ள மேற்கூரை, கதவு ஆகியவற்றை பழுதுநீக்கித் தரும்படி அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, என்றனர்.
No comments:
Post a Comment