புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள், உடன் தங்க போதுமான இடமின்றி, மருத்துவமனை வெளியில் உள்ள கழிவறைகளில் தங்கள் இரவுப்பொழுதை கழித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகர் டில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனை. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவிலான நோயாளிகள் காரணமாக மருத்துவமனை தற்போது திணறி வருகிறது. இந்நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டில்லியில் கடும் பனி நிலவுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி, புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் உ.பி., மாநிலம் புலந்தர்ஷார் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு இதுவரை மருத்துவமனையில் படுக்கை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு கண்களையும் இழந்த அந்த சிறுவன் தனது தந்தையுடன் தினமும் இரவு அருகிலுள்ள கழிவறை ஒன்றில் தங்கி வருகிறான். இவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலானோர் கழிவறையிலேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தங்குவது மட்டுமின்றி, சமைப்பதும் கூட அங்கு தான். தற்போது கடும் குளிர் காரணமாக வீடிழந்தோரும் கழிவறைகளை நோக்கி வருவதால், அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டில்லி அரசு வீடில்லாதவர்களுக்காக சுமார் 150 இல்லங்களை கட்டி வைத்துள்ளது. ஆனால் அவற்றை தவிர்த்து 3 லட்சம் மக்கள் தற்போது வீதிகளில், உறைய வைக்கும் பனியில் தங்கி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த பதில், பனியை விட உறைய வைக்கிறது அவர்கள் தரும் இல்லங்கள். ஆம். அந்த இல்லங்களில் தங்குவதை விட கழிவறைகளில் தங்கி விடலாம் என்றே இங்கு வந்துள்ளதாகவும், கழிவறைகளை விட அந்த இல்லங்கள் அவ்வளவு மோசமாகவும், சுகாதாரக்கேடாகவும் இருப்பதாக கூறுகின்றனர் அங்கு சென்று திரும்பியவர்கள்.
புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள், உடன் தங்க போதுமான இடமின்றி, மருத்துவமனை வெளியில் உள்ள கழிவறைகளில் தங்கள் இரவுப்பொழுதை கழித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகர் டில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனை. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவிலான நோயாளிகள் காரணமாக மருத்துவமனை தற்போது திணறி வருகிறது. இந்நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டில்லியில் கடும் பனி நிலவுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி, புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் உ.பி., மாநிலம் புலந்தர்ஷார் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு இதுவரை மருத்துவமனையில் படுக்கை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு கண்களையும் இழந்த அந்த சிறுவன் தனது தந்தையுடன் தினமும் இரவு அருகிலுள்ள கழிவறை ஒன்றில் தங்கி வருகிறான். இவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலானோர் கழிவறையிலேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தங்குவது மட்டுமின்றி, சமைப்பதும் கூட அங்கு தான். தற்போது கடும் குளிர் காரணமாக வீடிழந்தோரும் கழிவறைகளை நோக்கி வருவதால், அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டில்லி அரசு வீடில்லாதவர்களுக்காக சுமார் 150 இல்லங்களை கட்டி வைத்துள்ளது. ஆனால் அவற்றை தவிர்த்து 3 லட்சம் மக்கள் தற்போது வீதிகளில், உறைய வைக்கும் பனியில் தங்கி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த பதில், பனியை விட உறைய வைக்கிறது அவர்கள் தரும் இல்லங்கள். ஆம். அந்த இல்லங்களில் தங்குவதை விட கழிவறைகளில் தங்கி விடலாம் என்றே இங்கு வந்துள்ளதாகவும், கழிவறைகளை விட அந்த இல்லங்கள் அவ்வளவு மோசமாகவும், சுகாதாரக்கேடாகவும் இருப்பதாக கூறுகின்றனர் அங்கு சென்று திரும்பியவர்கள்.
No comments:
Post a Comment