Wednesday, January 2, 2013


மாணவருக்கு கத்திக்குத்து காதலியின் தந்தை கைது
மதுரை : மதுரையில் காதல் பிரச்னையில், கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார்.
மதுரை நாகமலை பூமிநாதன் மகன் வெற்றிவேல், 20. இவர், பி.காம்., இறுதியாண்டு மாணவர். பல்கலை ஊழியர் மணியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)மகள் உமா, 20. இவர், வேறு ஒரு கல்லூரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். இவரும், வெற்றிவேலும் ஏழாண்டாக காதலித்து வந்தனர்.
இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் சென்ற வெற்றிவேலை வழிமறித்த மணியன் கத்தியால் குத்தினார். அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணியனை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment