Wednesday, January 2, 2013


தண்ணீரின்றி நெல், பருத்தி, மக்காசோளம் பேரையூர் தாலுகா விவசாயிகள் கண்ணீர்
பேரையூர்:பேரையூர் தாலுகாவில், 
ஆயிரக்கணக்கான ஏக்கர் 
பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், பருத்தி, மக்காசோளம் பயிர்கள், தண்ணீரின்றி கருகியதால் 
விவசாயிகள் கண்ணீரில் 
மூழ்கியுள்ளனர்.
இத்தாலுகாவில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல், 4 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், 4 ஆயிரம் ஏக்கரில் பருத்தி, சோளம், கம்பு போன்ற தானிய வகைகள் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. மழை இல்லாததால் இத்தாலுகாவில், கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், 60 சதவீதம் நெற்பயிர்கள் இதுவரை முற்றிலும் கருகிவிட்டன. "40 சதவீதம் நெற்பயிர்களிலும் மகசூல் இருக்காது,' என்கின்றனர் விவசாயிகள். 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி முற்றிலும் கருகிவிட்டன. இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 
திருமால், பெரியபூலாம்பட்டி: 
4 ஏக்கரில் நெல் நடவு செய்தேன். உழவு, நடவு, அடி உரமிட ரூ.70 ஆயிரம் செலவிட்டேன். ரூ.50 ஆயிரத்துக்கு நகைகளை அடகு வைத்தேன். 90 நாட்கள் பயிர்களுக்கு, ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர்கூட கிணற்றில் இல்லாததால் பயிர்கள், அனைத்தும் கருகிப்போச்சு. அடகு வச்ச நகையை எப்படி திருப்புவது என்று நினைத்தாலே கண்ணுமுழி பிதுங்குது. அரசு நிவாரணம் அளிக்கவேண்டும்.
வேலு: முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு வறட்சியை, இத்தாலுகாவில் நான் பார்த்ததில்லை. காய்ந்த நெல்லினுடைய வைக்கோல் கூட விற்பனையாகவில்லை. ஆடு, மாடுகளுக்கு தீனியாகின்றன. ஏராளமான விவசாயிகள் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
பாண்டியம்மாள்: மூன்று ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டேன். ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவானது. ஆனால், ஒரு மக்காசோள கதிரில் கூட உருப்படியான விளைச்சல் இல்லை. விளையாத கதிர்களை அழிப்பதற்கு செலவிட கூட எங்களுக்கு சக்தியில்லை. அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment