Sunday, January 20, 2013

பெண் தற்கொலை: இருவர் கைது

பெருங்குடி;பெருங்குடி சமத்துவபுரம் அருகே தனியார் தோட்டத்தில், மகேந்திரன் என்பவர் குடும்பத்துடன் தங்கி, காவலாளியாக வேலை பார்க்கிறார். இவரது மகள் ரஞ்சிதா, 19. இவரும், வலையங்குளம் மச்சக்காளை மகன் வடிவேலுவும், 21, காதலித்தனர். சில நாட்களுக்கு முன்பு வடிவேல், மச்சகாளை ஆகியோர் ரஞ்சிதா வீட்டிற்கு சென்று, அவதூறாக பேசினர். அன்று இரவு 8 மணிக்கு வெளியில் சென்ற ரஞ்சிதா வீடு திரும்பவில்லை. நேற்று காலை, மகேந்திரன் வேலை பார்க்கும் தோட்டத்திலுள்ள கிணற்றில் ரஞ்சிதா இறந்து கிடந்தார். இதுகுறித்து மகேந்திரன் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். வடிவேல், மச்சக்காளையை @பாலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment