Sunday, January 20, 2013

மதுரையில் வழக்குப்பதிவு காணாத "சைபர் கிரைம்':மொபைல் போன் பயன்பாடு எதிரொலி

மதுரை:மொபைல் போன் பயன்பாடு எதிரொலியாக, மதுரை சைபர் கிரைம் பிரிவில் புகார்கள் ஏதும் வராததால், 2012ல் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.மதுரையில் கம்ப்யூட்டர், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடி உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் சைபர் கிரைம் பிரிவு செயல்படுகிறது. இதுதொடர்பான குற்றங்களை தடுக்க, பிரவுசிங் சென்டர்கள் நடத்தும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கமிஷனர் சஞ்சய்மாத்தூர் பேசுகையில், பிரவுசிங் சென்டர் நடத்துவோர், அதற்கான அனுமதியை பெற வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
அனுமதியின்றி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும். சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை செய்ய அனுமதிப்பதால், உரிமையாளர் தான் பெரிதும் பாதிக்கப்படுவார். இதை உணர்ந்து குற்றங்கள் நடக்க அனுமதிக்கக்கூடாது, என்றார்.பிரவுசிங் சென்டர்களில் ஆபாச படம் பார்ப்பது, ஆபாச படங்களில் சினிமா நடிகைகளின் படத்தை இணைத்து வெளியிடுவது போன்ற குற்றங்கள் நடந்தன.
தற்போது மொபைல் போனிலேயே அனைத்தையும் பார்த்து விடுகின்றனர். பேஸ் புக்கில் பெயர்களை போலியாக பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் புதிதாக முளைத்துள்ளன. மதுரை சைபர் கிரைம் பிரிவில் 2012ல் புகார்கள் ஏதும் வராததால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மதுரையில் அனுமதி பெற்ற 120 பிரவுசிங் சென்டர்கள் செயல்படுகின்றன.

No comments:

Post a Comment