Sunday, January 20, 2013

தந்தத்தில் பிளாஸ்டிக் குழாயுடன் சுற்றி திரியும் காட்டு யானை

தந்தத்தில் பிளாஸ்டிக் குழாயுடன் சுற்றி திரியும் காட்டு யானைமூணாறு:மூணாறில், தந்தத்தில் சிக்கிய, பிளாஸ்டிக் குழாயுடன், காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. மூணாறு பகுதியில், ஒரு குட்டியுடன், நான்கு காட்டு யானைகள்சுற்றி வருகின்றன. தற்போது, இந்த காட்டு யானைகள், மாட்டுப்பட்டி அணையின், கரையோரத்தில் முகாமிட்டுள்ளன.இந்த கூட்டத்தைச் சேர்ந்த, ஆண் யானை ஒன்றின், வலது பக்க தந்தத்தில், உறை அணிந்தது போன்று, கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் குழாய் சிக்கியுள்ளது. இதை வெளியே எடுக்க இயலாத நிலையில், யானை வலம் வருகிறது. இதனால், எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், குழாய் எவ்வாறு தந்தத்தில் சிக்கியது என்பது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மூணாறை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பிளாஸ்டிக் குழாய்கள் மூலம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.இது,யானையின் தந்தத்தில், எதிர்பாராத விதத்தில் சிக்கியிருக்கலாம் என, கருதப்படுகிறது.

No comments:

Post a Comment